முடிமாற்று அறுவை சிகிச்சையால் பறிபோன உயிர்கள்...! தலைமறைவான பல் மருத்துவர்...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை அதாவது ( hair transplantation ) செய்து கொண்ட 2 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் பல் மருத்துவர் ''அனுஷ்கா'' முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா, ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, அவரிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து,அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார். இதில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் மருத்துவரை சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lives lost due to hair transplant surgery Absconding dentist


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->