நோயின்றி வாழவேண்டுமா அப்போ நாங்க சொல்றத கேளுங்க - Seithipunal
Seithipunal


தொன்று தொட்டு நம் தமிழ் மண்ணில் உணவே மருந்து எனும் கோட்பாட்டை பின்பற்றி வாழ்ந்த முன்னோர்கள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுள் மற்றும் நல்ல தேக ஆரோக்யத்துடன் வாழ்ந்து வந்தனர்.

நம்முடைய சித்தர்கள் நாம் அன்றாடம் உண்ணும் உணவையும் நம்மை சுற்றி வளரும் செடி கொடிகளையும் வைத்து நம்மை நோயில்லாமல் வாழ்வது பற்றிய வாழ்வியலை நமக்கு பாடமாக் கொடுத்துள்ளனர்.

அது பற்றிய பின்வரும் பாடல் நாம் நம்மை எப்படி நோய் இல்லாமல் காத்துக கொள்வது எனக் கூறுகின்றது.

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா.

மூளைக்கு வல்லாரை

முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

பசிக்குசீ ரகமிஞ்சி

கல்லீரலுக்கு கரிசாலை

காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்

மூட்டுக்கு முடக்கறுத்தான்

அகத்திற்கு மருதம்பட்டை

அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை

உணர்ச்சிக்கு நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை

களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை

வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு தாமரைப்பூ

சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்

காய்ச்சலுக்கு நிலவேம்பு

விக்கலுக்கு மயிலிறகு

வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீர்

வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்

கழிச்சலுக்கு தயிர்சுண்டை

அக்கிக்கு வெண்பூசனை

ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

விதைநோயா கழற்சிவிதை

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்கு வெங்காரபனிநீர்

கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில் அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

அறிந்தவரை உரைத்தேனே!!

இந்த பாடலைப் பின்பற்றி நம் வாழ்வியலை அமைத்துக் கொண்டால் ஆரோக்யமாகவும், நோயின்றி, மருந்துகளின் வாசம் இன்றி இந்த வாழ்க்கையை பயனுள்ளதாக வாழலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Best Home Remedies for Healthy life


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->