பதனி.! பதனி.! பதனி.! ., பதனியில் மறைந்துள்ள பல ரகசிய குறிப்புகள்.!
benefits of padhani
நமது இல்லங்களில் சிறுவயதில் இருக்கும் நேரத்தில் நமது பெற்றோர் நுங்கு மற்றும் பதிநீரை வாங்கி வருவது வழக்கம். பனை மரத்தின் இலைகளில் சாலையோரத்தில் இருக்கும் பதிநீர் கடையில் கடைக்காரர் ஊற்ற அதனை குடிக்கும் போது வரும் இன்பம் அதனை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.
50 கிராம் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து கொண்டு., இலேசான சூட்டில் வறுத்து பொடியாக்கி காலை மற்றும் மாலை வேலையில் சுமார் 50 மிலி சூடான பதிநீரில் சேர்ந்து குடித்து வந்தால் இரத்த கடுப்பு., மூல சூடு போன்ற பிரச்சனைகள் தீரும்.
பதிநீருடன் மஞ்சள் தூளை சேர்ந்து காலை மற்றும் மாலை வேலையில் பருகி வந்தால் வயிற்றுப்புண்., தொண்டைபுண் மற்றும் வெப்ப கழிச்சல்., சீத கழிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
வெயில் காலங்களில் சுத்தமான பதிநீரை குடித்து வந்தால்., அதில் இருக்கும் இரும்பு சத்துக்களின் மூலமாக உடலில் இருக்கும் பித்தம் குறைந்து இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
கோடை காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தடை மற்றும் மாதவிடாய் தடையின் மூலமாக ஏற்படும் கருப்பை வலி., வாயு மற்றும் கட்டி போன்ற பிரச்சனைகளால் அவதிருரும் பிரச்சனையில் இருந்து தவிர்க்கவும்., குறைக்கவும் பனை குருத்தை உள் பகுதியை சாப்பிட வேண்டும். மேலும்., மார்பகம் திடீரென பெரிதாகி ஜன்னி நோய் போல இருக்கும் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
.
தொழு நோய்கள் இருக்கும் நபர்கள் பனை ஓலையில் காலை மற்றும் மாலை வேலையில் பதிநீரை குடித்து படுத்து வந்தால் தொழு நோய் குணமாகும். இந்த சமயத்தில் பனை ஓலையை விசிறியாக பயன்படுத்துவது மற்றும் பனை ஓலையில் சாப்பாடுகளை போட்டு சாப்பிட்டு வந்தால் நல்லது.
பதிநீரில் இருக்கும் நார்சத்தின் காரணமாக பிரசவ காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் நீக்கப்பட்டு., இதயத்தை வலுப்படுத்துகிறது. மேலும்., இதில் இருக்கும் சுண்ணாம்பு சத்தின் மூலமாக எலும்புகள் வலுப்பெறும்.
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதிநீரில் இருக்கும் அனைத்து சத்துக்களும் பாலுணர்வை இயற்கையாகவே கூடுகிறது.