தவசி முருங்கையில் உள்ள மருத்துவம் குணம் பற்றி தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


தவசி முருங்கை மூலிகை மருத்துவத்திலும், உணவுத் தயாரிப்பிலும், பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். இதன் இலை முருங்கையிலை போலவே இருந்தாலும் இது சிறு குத்துச்செடியாக வளரும். இது சாதாரணமாக அனைத்து மண்ணிலும் வளரும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படுகிறது. இது பத்திய உணவாக சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

தவசி முருங்கைக்கு மூக்குத்த பூண்டு என்ற பெயருண்டு. இது குழந்தைகளுக்கு வரும் மாந்தம், தோஷம், வயிற்றுப்பிசம், பொருமல், செரியாமை, வயிற்றில் ஏற்படும் ஒருவகை வலி ஆகியவற்றைப் போக்கும் குணமுடையது. இதன் இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர்வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.
சளியை போக்கும்

மாந்தம், மார்ச்சளி, கணை இவைகளால் வருந்தும் போது இந்த மாத்திரை ஒன்றை எடுத்துச் சந்தனக்கல்லில் இழைத்துக் கொடுத்தால் மேற்கண்ட வியாதிகள் குணமாகும்.

தவசி முருங்கையிலை, ஒரு பிடியுடன் கொஞ்சம் உப்பையும், மிளகையும் சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேனும், சேர்த்து ஒரு தேக்கரண்டி வீதம் இருவேளை கொடுத்தால் வயிற்றுப்பிசம் உடனே தணியும். இதன் இலையுடன் பூண்டு, மிளகு இவைகளை சமமாகச் சேர்த்து அரைத்து ஒரு மாத்திரை செய்து வெயிலில் காயவைத்து பத்திரஞ் செய்யவும். 

ஜூரத்தால் கபம் கட்டி மூச்சுத்திணறி ஆயாசப்படும்போது தவசி முருங்கை இலையை அரைத்து சாறு பிழிந்து கொஞ்சம் துளசிச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் சற்று நேரத்தில் கபம் கரைந்து மூச்சு தாராளமாய் விடமுடியும் காய்ச்சல் குணமடையும்

தபசு முருங்கை, சுக்குப்பொடி, உப்பு செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது சுக்குப் பொடி சேர்க்கவும். பின்னர், 20 முதல் 30 மில்லி வரை தபசு முருங்கை இலை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னை குணமாகும். இந்த தேனீர் சுவாசப் பாதையில் உள்ள அடைப்பை சரிசெய்யும். கரையாத நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். 

துளசியை போன்ற அமைப்பை உடைய தபசு முருங்கையை பயன்படுத்தி கட்டிகளை கரைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தபசு முருங்கை இலை, விளக்கெண்ணெய் மேல்பூச்சு செய்முறை:

ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தபசு முருங்கை இலை பசையை சேர்த்து வதக்கி கட்டிகளின் மீது பற்றாக போடும்போது கட்டிகள் வெகு விரைவில் கரைந்து போகும். அடிபட்ட இடங்களில் இதை போடும்போது ரத்த நாளங்கள் சிதைந்துபோன நிலைகூட சரியாகும். கல் போன்று கரையாமல் இருக்கும் கட்டிகள் மீது வைத்து கட்டுவதன் மூலம் கட்டிகள் கரையும். கட்டிகளால் ஏற்படும் வீக்கம், வலி சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of dhavasi murungai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->