கனமழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!!
Today Heavy rain 3 district School leave in Tamilnadu
தமிழகத்தில் கனமழை காரணமாக, இன்று 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடலோர பகுதியில் இடையே வரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்த மூன்று நாட்களும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Today Heavy rain 3 district School leave in Tamilnadu