தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியாகி உள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம்‌ செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும்‌. தெரிவு முறைகளில்‌ வெளிப்படைத்தன்மை மற்றும்‌ நம்பகத்தன்மையை அதிகரிக்கும்‌ பொருட்டும்‌. போட்டித்‌ தேர்வுகளை விரைவாக நிறைவுசெய்யும்‌ வகையிலும்‌, அவ்வப்போது சீர்திருத்தங்களையும்‌ அறிமுகப்படுத்தி வருகிறது. 

அதன்‌ தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கும்‌ அனைத்து தேர்வர்களும்‌ தங்களது ஆதார்‌ குறித்த விவரங்களை 28.02.2022 ஆம்‌ தேதிக்குள்‌, தவறாமல்‌ இணைத்து எதிர்காலத்தில்‌ தேர்வாணையத்தால்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கைகளின்‌ அடிப்படையில்‌ தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

மேலும்‌. இது குறித்து விளக்கம்‌ ஏதேனும்‌ தேவைப்படுமானால்‌, 18004190958 என்ற கட்டணமில்லாத்‌ தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல்‌ மூலமாக அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌
மாலை 05.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்‌ என அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC new announcement for Exam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->