நாளை நடக்கும் TNPSC குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகள்!
TNPSC Group 1 exam
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகள் நாளை நடைபெறுகின்றன. சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட 70 உயர்நிலை பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்தப் பதவிகளுக்காக மொத்தம் 2,49,296 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் குரூப்-1க்கு மட்டும் 2,27,982 பேர், குரூப்-1ஏக்கு 6,465 பேர் மற்றும் இரண்டுக்கும் சேர்த்து 14,849 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முதல்நிலை தேர்வு, தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் நடைபெறுகிறது. தேர்வை ஒழுங்காக நடத்த 987 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.