நாளை நடக்கும் TNPSC குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகள் நாளை நடைபெறுகின்றன. சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட 70 உயர்நிலை பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

இந்தப் பதவிகளுக்காக மொத்தம் 2,49,296 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் குரூப்-1க்கு மட்டும் 2,27,982 பேர், குரூப்-1ஏக்கு 6,465 பேர் மற்றும் இரண்டுக்கும் சேர்த்து 14,849 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

முதல்நிலை தேர்வு, தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் நடைபெறுகிறது. தேர்வை ஒழுங்காக நடத்த 987 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 170 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group 1 exam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->