தமிழக காவல் துறையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு.. 10,906 காலி பணியிடங்கள் அறிவிப்பு.!!
police job in tamilnadu
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், http://tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.10,096 பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு நடைபெறும்.
37 மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படும். இந்த எழுத்து தேர்வு 1 மணி 20 நிமிடங்கள் நடைபெறும். ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 3 ஆயிரத்து 99 பெண்கள், திருநங்கைகள் உட்பட 3 ஆயிரத்து 784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 119 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 458 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.