இளைஞர்களே தயாரா.! நாளை மறுநாள்(24.02.2023) அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.!
February 24 Private Employment Camp in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் பிப்.24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2ஆம், 3ஆம், 4ஆம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நடைபெறும் இடம்: அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம்.
இந்த முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.
வயது: 18 முதல் 35 வரை
கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
• வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுனர்களும் பயன்பெறும் பொருட்டு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
• முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.
• மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
English Summary
February 24 Private Employment Camp in Ariyalur