பாவம் அந்த இளம்பெண்...! கார் ஓட்டுநர் செய்த காரியம் என்ன தெரியுமா?
Poor young woman Do you know what car driver did
சென்னை வேளச்சேரியிலுள்ள வணிக வளாகத்தில் 30 வயதான இளம்பெண் ஒருவர் அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு, வேளச்சேரி சாலையிலுள்ள கடையில் இட்லி மாவு வாங்கி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இதுத் தொடர்பாக வேளச்சேரி காவலில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து காவலர்கள் அதே பகுதியிலுள்ள 70 கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து கிண்டியை சேர்ந்த வினோத் (வயது 28) என்பவர்தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை உடனடியாக தேடி பிடித்து கைது செய்தனர்.
இதன் மேற்கட்ட விசாரணையில் வினோத் கார் டிரைவர் என்பதும் மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்று இருந்ததால், கடந்த ஒரு மாதமாக மனைவியுடன் தாம்பத்ய உறவில் இல்லாததால் தவியாய் தவித்து வந்ததும், அதன் காரணமாகவே மதுபோதையில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவலர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா? என்று மக்கள் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
English Summary
Poor young woman Do you know what car driver did