அடக் கடவுளே! ரெயில் முன் பாய்ந்து இறந்த காதல் ஜோடி...! நடந்தது என்ன?
couple who jumped front train and died What happened
திருப்பத்தூரில் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமாரின் மகன் 'கோகுல்' என்கிற 'நித்தின் ராகுல்' (வயது 20). ஜோலார்பேட்டை காவேரி பட்டு பகுதியை சேர்ந்தவர் அணுமுத்து மகள் தரணி (வயது 20 ). இவரும் நித்தின் ராகுலும் கர்நாடகாவிலுள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தனர்.

அப்போது பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதில் தரணி 9 மாத கர்ப்பம் ஆனார்.இந்நிலையில் நித்தின் ராகுல் இவர்களது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் மன வேதனை அடைந்த நித்தின் ராகுல் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியிலுள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அவர் மீது ரெயில் மோதியதில் இறந்தார்.
இதை அறிந்த தரணி, இன்று காலை வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். திருவனந்தபுரம் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில், தரணியின் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டது. இந்த சம்பவத்தை அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தக் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
couple who jumped front train and died What happened