காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞரின் கொடூர செயல்..! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை கொன்று எரித்த காதலனை போலீசார் கத்தி செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் என்ற பெண், கல்லூரியில் ஆங்கிலம் பயின்று வந்ததோடு, மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழியும் கற்று வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அவரது வீட்டிலிருந்து நிறுவனத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார்.

சில மணி நேரங்கள் கழித்து மெஹக்கின் தாய் தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்ட போது, மெஹக் ஜெயின் 02 முதல் 03 மணிக்குள் வீடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அவர் வீடு திரும்பவில்லை. அத்துடன் அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், ஆர்ஷ்க்ரித்தின் தந்தை, மெஹக்கின் தந்தையை தொடர்பு கொண்டு, ஆர்ஷ்க்ரித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மெஹக் ஜெயின் தனது நண்பர்கள் மூலம் எனது மகனை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

மெஹக்கின் குடும்பத்தினர் உடனடியாக ஜஹாங்கீர்புரி காவல் நிலையத்திற்கு சென்று, அங்கே தங்களது மகள் எங்கே? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் மெஹ்ராலி காவல் நிலையத்தில் சென்று கேளுங்கள் என்று கூறிவிட, உடனடியாகமெஹக்கின் குடும்பத்தினர் மெஹ்ராலி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களது மகமகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்று  குறித்து புகார் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, போலீசாரின் தொடர் விசாரணை நடத்தினர். அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்ஷ்க்ரித், 200 மில்லி பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் சஞ்ஜய் வனத்தில் இருந்துகொண்டு, அங்கு மெஹக் ஜெயினை வருமாறு அழைத்துள்ளார். அவரும் அங்கு சென்றுள்ளார். மெஹக் வந்தபோது  ஆர்ஷ்க்ரித்துக்கும் மெஹக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெஹக்கை ஆர்ஷ்க்ரித் குத்திக் கொன்றுள்ளார்.

ஆத்திரம் தீராத ஆர்ஷ்க்ரித் மெஹக்கின் முகத்தையும், உடலையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதனால், பகுதியளவு எரிந்த நிலையில் மெஹக்கின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர் மெஹக்கின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆர்ஷ்க்ரித் ஏற்கனவே இரு முறை தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், அவனை தடுத்தபோதும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். 

அத்துடன், மெஹக்கின் மூத்த சகோதரி அளித்த வாக்குமூலத்தில், தனது சகோதரி மெஹக்கின் செல்போன் எண்ணை ஹேக் செய்து, அவர் சமூக வலைதளங்களில் செய்தி அனுப்பினாலும், அவரது இருப்பிடத்தை ஆர்ஷ்க்ரித் கண்காணித்ததாகவும் கூறியுள்ளார். ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை வரவழைத்து கொன்று எரித்த ஆர்ஷ்க்ரித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறதாக தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man murdered a college student who refused to accept his love doused her in petrol and set her on fire


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->