ஏன் சென்னை உயர்நீதிமன்றம் மீரா மிதுனை கைது செய்ய உத்தரவிட்டது? - Seithipunal
Seithipunal


youtube troll -களுக்கு பேர்போன பிரபல நடிகை மீரா மிதுன். இவர் ஜாதிக்குறித்து முக்கியமாக பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவலில் புகாரளித்துள்ளனர்.அதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில்  சென்னை உயர்நீதிமன்றம், பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why did Madras High Court order arrest Meera Mithun


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->