தொடர் சர்ச்சையில் சிக்கும் நடிகை த்ரிஷா.! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் பொதுவெளியில் த்ரிஷாவை தரக்குறைவாக பேசினார். இதனைக் கண்டித்து த்ரிஷா ட்விட் வெளியிடவும், இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. 

இது தொடர்பாக மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விஷயத்தில் முதலில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வந்த அவர் பிறகு, 'த்ரிஷாவே என்னை மன்னித்து விடு' என்றார். 

உடனே த்ரிஷாவும் மன்னித்து விட்டதாக ட்விட் செய்துவிட்டு காவல் நிலையத்திலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். இந்த நிலையில், த்ரிஷா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது, கடந்த ஒன்றாம் தேதி ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தை சந்தீப் வங்கா ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்த படத்தை பார்த்த நடிகை த்ரிஷா, "ஒரே வார்த்தையில் இந்த படம் குறித்து சொல்ல வேண்டும் என்றால் 'கல்ட்' " என்று குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். 

இந்த கருத்திற்குத்தான் தற்போது ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். சுமாரான படத்தை ஏன் இப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று இணையத்தில் திட்டி தீர்த்தது சர்ச்சையாகியுள்ளது. இதனால், அந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவசர அவசரமாக நீக்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trisha again controversy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->