ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பணம்.. தங்க காசுகள்.. மொய் பணத்துடன் செவ்வனே நடைபெறும் தேர்தல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தற்போது துவங்கியது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்திரன் அணிக்கும் - முரளி அணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. மாலை 4 மணிவரை நடைபெறும் தேர்தல் முடிவுகள், இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், அங்கு மொய் கவருடன் வருகை தந்த டி.ராஜேந்தரின் ஆதரவாளர், வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் பணம் கொடுப்பதாக முரளி அணியின் ஆதரவாளர்கள் பரபரப்பு வாக்குவாதம் எழுப்பியுள்ளனர். 

மேலும், டி.ராஜேந்தர் தரப்பில் முரளியின் தரப்பினர் தான் தங்க காசுகளை கொடுத்தார்கள் என்றும், நாங்கள் தேர்தலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி சேகர், " நல்ல நபருக்கு எனது வாக்குகளை பதிவு செய்துள்ளேன். நன்மையை செய்யும் நபருக்கு மட்டுமே எனது வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாருக்கு எனது வாக்குகளை பதிவு செய்தேன் என்பதை தெரிவிக்க இயலாது. நல்லதே நடக்கும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Film Producers Council Election Bribery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->