தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம்.. ஆளுநர் தமிழிசை வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், கட்சி தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதில்லை. ஜூன் 14ஆம் தேதி விஜயகாந்த் வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், "அன்புச் சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை குறித்து சகோதரி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தேன். மேலும் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில்  பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai tweet for vijayakanth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->