#சென்னை | பிரபல தமிழ் நடிகையை காணவில்லை - காவல் ஆணையரிடம் கண்ணீருடன் புகாரளித்த நடிகையின் தாய்! - Seithipunal
Seithipunal


போலீசாரால் தேடப்படும் குற்றவாளி நடிகை மீரா மிதுன், அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதாலும், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருப்பாலும், அவரை கைது செய்ய முடியாமல், நீதிமன்றத்தில் வெறுங்கையோடு தமிழக போலீசார் நிற்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

சர்ச்சைகளுக்கு பெயர் பெட்ரா நடிகை மீரா மிதுன், சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றில் பேசும்போது, பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசினார்.

அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தவே, நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்த நடிகை மீரா  மீதும் தலைமறைவாகினார். இதனையடுத்து நடிகை மீரா மிதுனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

ஆனால், கடந்த 4 மாதங்களாகவே நடிகை மீரா மிதுன் தலைமறைவான வாழ்க்கை நடத்தி வருவதால் போலீசார் அவரை கைது செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுன் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும், அவரின் தாய் சியாமளா காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil actress meera mitun missing case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->