பாலியல் வழக்கில் சிக்கிய நடிகை, திருமணமான ஒரே ஆண்டில் ஏற்பட்ட சோகம்..! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் முதலில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 'Makdee' என்ற ஹிந்தி படம் ஒன்றில் நடித்து, அதற்காக தேசிய விருதையும் வென்றவர் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமலே போனது.

அதன் பின்னர், நடிகை ஸ்வேதா பாசு  கடந்த ஆண்டு 2014ல் ஹைதராபாத் நட்சத்திர விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, வெளியில் வந்த அவர், நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும், பண தேவை இருந்ததாலும் வேறு வழி இன்றி இந்த தொழில் ஈடுபட்டதாகவும் அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 

இந்த நிலையில் கடந்த ஆண்டு 2018 டிசம்பர் 13ம் தேதி அவருக்கும் ரோஹித் மிட்டல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணம் வாழ்க்கை துவங்கி ஒரு வருடத்திலே இருவரும் பிரித்து விட்டதாக தற்போது அறிவித்திருக்கிறார்கள். 

திருமணத்திற்கு முன்பு 4 வருடங்களாக காதலித்து வந்த அவர்கள், தற்போது பிரிந்துள்ளதாக அறிவித்திருப்பது அவர்களது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shwet abasu prasad got divorced


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->