பிக்பாஸ் பிரபலத்தை அடித்து துன்புறுத்திய கணவன்.! நடிகை எடுத்த அதிரடி முடிவு.!!
serial actress husband arrest
பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்பது வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகன் உள்ளான். அதன்பிறகும் இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்த. கடந்த 2013-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அபினவ் கோலிக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் மது போதையில் ஸ்வேதா திவாரியுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. இதன் இருவருக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வேதா திவாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அபினவ் கோலி தன்னையும், தனது மகளையும் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் அபினவ் கோலியை கைது செய்துள்ளனர்.
English Summary
serial actress husband arrest