பிரபல சீரியல் நடிகை கால்வாயில் மூழ்கி பலி.. அதிர்ச்சியில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தை சார்ந்த  நடிகை திபென்ஷி திவான். இவர் சில சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரிவாரி மாவட்டத்தில் உள்ள தும்பஹரி என்ற தனது சொந்த கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று திபென்ஷி திவான் சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திவான் தனது குடும்ப உறுப்பினர் உடன் கிராமத்தில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றார். 

கால்வாயில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீர் வேகமாக அதிகரித்ததால், நிலை தடுமாறு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற உறவினர்கள் முயற்சித்தனர். ஆனாலும், திபென்ஷி திவான் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு திபென்ஷி திவானை கால்வாயிலிருந்து பிணமாக மீட்டனர். இந்த சம்பவம் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்வாயில் குளிக்க சென்று நடிகை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Serial actress drowned in canal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->