நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா! வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1.10 கோடி - Seithipunal
Seithipunal


இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையின்போது, இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் துயரைப் போக்க,அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக பாலிவுட் நடிகை ''பிரீத்தி ஜிந்தா'' ரூ.1.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

மேலும் இதைப்பற்றி, கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சவுத் வெஸ்டர்ன் கமெண்டின் கீழ் செயல்படும் ராணுவ மகளிர் நல சங்கத்திற்கு (AWWA) இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நடிகை பிரீத்தி ஜிந்தா அடுத்ததாக சன்னி தியோலுக்கு ஜோடியாக 'லாகூர் 1947' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது, அமீர் கான் தயாரிப்பில், பிரீத்தி ஜிந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படமாகும்.இதனால் இப்படத்திற்கு வரவேற்பு அதிக அளவில் உருவாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Preity Zinta donates Rs 1point10 crore to the families of martyred soldiers


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->