#திடீர்_திருப்பம் || நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!
nadigarsangamElection
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ல் நடைபெற்ற தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், நாசர் தாய்மையில் விஷால் கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அண்மையில், நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எனவும் உத்தரவு பிறப்பித்தது.
அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக ஐசரி கணேஷ் புகார் கூறியதால், நடிகர் சங்கத் தேர்தல், துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.