'பல இரவுகள் தூக்கமில்லை'...'மேடையிலேயே உடைந்து அழுத ஜெனிலியா'...! - நட்சத்திர தம்பதியின் உருக்கமான பேச்சு...!
Many nights without sleep Genelia broke down and cried stage star couple heartfelt speech
மராட்டியப் பேரரசின் புகழ்மிகு வீரரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. வரலாற்றின் வீரச் சுவடுகளை திரையில் உயிர்ப்பிக்கும் இந்த நிகழ்வு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

இந்த விழாவில், நடிகை ஜெனிலியா மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கிய தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படத்தை இயக்கியும், தலைமை கதாபாத்திரமாகவும் நடித்துள்ள ரித்தேஷ் தேஷ்முக், படத்தின் உருவாக்கப் பயணம், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தனது மன உறுதியைப் பற்றி உருக்கமாக பகிர்ந்துகொண்டார்.
அப்போது, தனது மனைவி ஜெனிலியாவை நோக்கி, “என் வெற்றியின் பின்னால் நிற்கும் உறுதியான தூண் நீயே” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த வார்த்தைகள் கேட்டவுடன், மேடையில் நின்ற ஜெனிலியா தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி அழுதார். உடனே ரித்தேஷ் அவரை அணைத்துப் பாசமாக ஆறுதல் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த பிரமாண்ட படத்தில், ரித்தேஷ் தேஷ்முக் சிவாஜி மகாராஜாகவும், ஜெனிலியா சாய் பாய் கதாபாத்திரத்திலும், அபிஷேக் பச்சன் சம்பாஜியாகவும், சஞ்சய் தத் அப்சல் கானாகவும், வித்யா பாலன் படி பேகமாகவும் நடித்துள்ளனர். மேலும், பர்தீன் கான், பாக்யஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அதோடு, சல்மான் கான் ‘ஜீவா மஹாலா’ என்ற வீரர் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் களம் இறங்குகிறார்.ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், அஜய்–அதுல் இசையில் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ளது.
பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், வரும் மே 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Many nights without sleep Genelia broke down and cried stage star couple heartfelt speech