குட்டி பாப்பாவை போல லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.! அடையாளம் தெரியாமல் விழிக்கும் ரசிகர்கள்.!
losliya school student photoshoot
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3ல் இலங்கையை சேர்ந்த பிரபலமான லாஸ்லியா மிகவும் மக்கள் மனதை கவர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே லாஸ்லியாவிற்கு என்று ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதனை தொடர்ந்து அவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இறுதி வரை நீடித்த லாஸ்லியா பின்னர் மூன்றாம் இடத்தை வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் ஏராளமான நிகழ்வுகளிலும், விருது விழாக்களிலும் படு பிஸியாக இருக்கின்றார்.
தற்போது லாஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். நெடுஞ்சாலை படத்தில் நாயகனும், பிக்பாஸ் வெற்றியாளருமான ஆரியுடன் நடிக்க இருக்கிறார். அவருடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இணைகின்றார்.
இதனால் அவர்களின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாகும் வகையில் லாஸின் லேட்டஸ்ட் போட்டோஷூட் அமைந்துள்ளது. அதில் மெழுகு சிலை போல நிற்கும் லாஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உறைந்து போய் இருக்கின்றனர்.
English Summary
losliya school student photoshoot