தனது மாமியாருக்காக குஷ்பூ செய்த செயல்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
kushboo tweet about her mother in law
தமிழில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமடைந்து கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பு, இவர் தமிழை தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார்.
எந்த நடிகைக்கும் கிடைக்காத புகழ் நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்தது. தமிழ்நாட்டு ரசிகர்கள் குஷ்புவுக்கு கோவில் கட்டி கொண்டாடினர். இவருக்கு இயக்குனர் சுந்தர் சி யுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது குஷ்புவிற்கு 20 வயதில் இரு மகள்கள் இருக்கின்றனர்.
பல பெண்களுக்கு மாமியார் என்றாலே ஒத்துவராது என்று கூறுவார்கள். ஆனால், நடிகை குஷ்புவுக்கு அப்படி இல்லை. அவர் தனது மாமியாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைதனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.
இதுகுறித்து டுவிட்டர் பதிவில் குஷ்பூ, "எங்கள் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்களுடைய இல்லத்தையும், இதயத்தையும் ஆட்சி செய்பவர். எங்களுடைய குடும்பம் மிக ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம்., என்னுடைய மாமியார் தான். எங்களை வழிநடத்த அவர் கிடைத்தது, நாங்கள் செய்த பாக்கியம். லவ் யு அம்மா." என்று கூறியுள்ளார்.
English Summary
kushboo tweet about her mother in law