இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு பிரபல கேரள நடிகை பதிலடி! - Seithipunal
Seithipunal


எனக்கு முறைப்படி தகவல் தெரிவித்தால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகவே இருக்கிறேன் என இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு பிரபல கேரள நடிகை அனஸ்வரா பதிலடி கொடுத்துள்ளார்.

மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர்  அனஸ்வரா ராஜன். இவரது நடிப்பில்  சமீபத்தில் வெளியான ரேகாசித்திரம்'படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் மலையாளத்தில் பிரபலமானார்.இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சிலர்'.

இந்த படத்தை இயக்குனர் தீபு கருணாகரன் இயக்கியுள்ளார்.இந்தநிலையில்  சமீபத்தில் இயக்குனர் அளித்த ஒரு பேட்டியில், 'இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகை அனஸ்வரா பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து  நடிகை அனஸ்வரா கூறுகையில், ' படத்தின் புரமோஷன் குறித்து முறையான தகவல் எதுவும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும்  ஒரு நடிகையாக என்னுடைய படங்களை புரமோட் செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு என கூறியுள்ளார் . மேலும் படத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கியமான ஒன்று என்பது எனக்கு தெரியும் என்றும்  எனக்கு முறைப்படி தகவல் தெரிவித்தால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகவே இருக்கிறேன் என கூறினார்.

மேலும் அதேசமயம் இப்படி இயக்குனர் பொதுவெளியில் என்னைப் பற்றி தவறான எண்ணம் ஏற்படும் விதமாக கருத்து கூறி வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,' என தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fseithipunal%2Fvideos%2F1650448928922555%2F&show_text=false&width=267&t=0


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala actress reacts to director s allegation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->