இந்திய திரையுலகில் முதல் ஆஸ்கார் விருது வென்றவர் யார் இவர்.? இன்று அவருடைய பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் 1921ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

 இவர் ஜவஹர்லால் நேரு, பூபதி பூஷண் ஆகியோரின் நாவல்களில் அட்டைப் படம் வரைந்ததன் மூலம் புகழ்பெற்றார். 1947ஆம் ஆண்டு சித்தானந்தா தாஸ் குப்தாவுடனும், மற்றவர்களுடனும் இணைந்து ராய் கல்கத்தா பிலிம் சொசைட்டியை உருவாக்கினார்.

பிறகு தனக்குள் காவியமாக சுழன்றுகொண்டிருந்த பதேர் பாஞ்சாலி திரைப்படத்தை 1955ஆம் ஆண்டு வெளியிட்டார். உலக அளவில் தலைசிறந்த இயக்குநராக இவரை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது.

அதன் பிறகு அபராஜிதோ, அபுர் சன்சார், தேவி, மஹாநகர், சாருலதா, தீன் கன்யா உள்ளிட்ட இவரது எல்லாப் படைப்புகளுமே உலக அளவில் புகழ்பெற்றன.

தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992ஆம் ஆண்டு சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. மேலும், 1992ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.

இந்திய திரைப்படங்களின் மீது உலகின் கவனத்தை திருப்பிய இணையற்ற இயக்குநராகப் போற்றப்பட்ட சத்யஜித் ராய் 1992ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian cinema star Sathyajit ray birthday today


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->