Freedom Fighters : இரவு பகல் பாராமல் உழைத்த... சிறந்த கல்வியாளர்... யார் இவர்.?!
Gopal ganesh agarkar history in tamil
கோபால் கணேஷ் அகர்க்கர்:
மகாராஷ்டிரத்தின் சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், சிந்தனையாளர் கோபால் கணேஷ் அகர்க்கரை பற்றிய சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
கோபால் கணேஷ் அகர்க்கர் மகாராஷ்டிர மாநிலம் சாதாரா மாவட்டத்தின் கராட் தாலுக்காவில் டேம்பூ என்ற கிராமத்தில் பிறந்தார்.
கல்வி :
பள்ளிக் கல்வியை கராட்டில் பயின்றார். சிறுவயதிலேயே சமூக மேம்பாட்டு சிந்தனை மேலோங்கியிருந்தது. 1878-ல் இளங்கலை பட்டமும், 1880-ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.
விடுதலை போராட்டத்தில் கோபால் கணேஷ் அகர்கரின் பங்கு :
கோபால் கணேஷ் அகர்க்கர் படித்த முடித்த உடனேயே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார். பெரும்பாலான சமூகப் பிரச்சனைகளுக்கு கல்வி தீர்வாக முடியும் என்று நம்பினார். அதற்கான முனைப்புகளில் இறங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர்களும் சமூக சீர்திருத்தவாதிகளுமான திலகர், விஷ்ணுசாஸ்திரி, சிப்லூன்கர், மகாதேவ் வல்லால் நாம்ஜோஷி ஆகியோரின் உதவியுடன் பல கல்வி நிறுவனங்களை முன்னின்று தொடங்கினார். முதலில் 1880ஆம் ஆண்டு புனேயில் ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தொடக்கி அதனை நடத்தி வந்தார்.
பின் கோபால் கணேஷ் அகர்க்கர் சில நாட்களில் சொந்தமாக 'சுதாரக்" என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் சமூக அநீதிகள், தீண்டாமை, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்டார். வெறும் பிரச்சாரம் செய்வதோடு மட்டுமல்லாமல் தான் கூறும் ஒழுக்க நெறிகளை வாழ்வில் பின்பற்றியும் வந்தார். பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் பலரை ஈர்த்தது. அதனால் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. விதவை மறுமணத்தைத் இவர் தீவிரமாக ஆதரித்தார்.
கோபால் கணேஷ் அகர்க்கர், குழந்தைத் திருமணம், விதவைகளின் தலைமழித்தல், இனப்பாகுபாடு, தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகிய அவலங்களைத் தீவிரமாக எதிர்த்தார். இதை எதிர்த்து பல போராட்டங்களில் கலந்து கொண்டார். நண்பர்களுடன் இணைந்து 1884ஆம் ஆண்டு 'னுநஉஉயn நுனரஉயவழைn ளுழஉநைவல" என்ற கல்வி அமைப்பையும், 1885ஆம் ஆண்டு 'குநசபரளளழn ஊழடடநபந" என்ற கல்லூரியையும் தொடங்கினார்.
1891ஆம் ஆண்டு ஃபர்கூசன் கல்லூரியில் தலைமைப் பொறுப்பை ஏற்று இறுதிவரை செயல்பட்டார். மக்கள் சிறந்த கல்வி பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார்.
கோபால் கணேஷ் அகர்க்கரின் மறைவு :
குறுகிய காலத்துக்குள் மகாராஷ்டிராவில் சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வித் துறைகளுக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளார் கோபால் கணேஷ் அகர்க்கர். 19ம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும், கல்வியாளர்களுள் ஒருவருமான கோபால் கணேஷ் அகர்க்கர், உடல்நலக்குறைவால் 1895ஆம் ஆண்டு தனது 39வது வயதில் மறைந்தார்.
English Summary
Gopal ganesh agarkar history in tamil