பரபரப்பு தகவல்! எனக்கு இரைப்பை பிரச்சனை அலர்ஜி... போதைப்பொருள் பயன்படுத்த முடியாது...! - நடிகர் கிருஷ்ணா - Seithipunal
Seithipunal


நேற்று போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் 'கிருஷ்ணா' காவலர் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

கிருஷ்ணா:

மேலும், காவல் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது,"நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நல்ல நண்பர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம். ஆனால் என்னை பற்றி ஸ்ரீகாந்த் சொன்னது தவறான தகவல். நான் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது.

போதைப் பொருள் கும்பலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இரைப்பை அழற்சி நோய் இருக்கிறது. இதயத் துடிப்பு பிரச்சனையும் உள்ளது. அதனால் நான் போதைப் பொருள் எடுத்துக்கொள்ள முடியாது. என்னை பற்றி வந்த தவறான தகவல்களை மறுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் காவலர்கள் சோதனை நடத்தினர்.இதில் நடிகர் கிருஷ்ணாவிடம் 17 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியிலுள்ள அவரது வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காவலர்கள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. நடிகர் கிருஷ்ணா வீட்டில் அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக காவலர்கள் எடுத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Exciting news I have stomach problems allergies I cant use drugs Actor Krishna


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->