ஒரே ட்வீட்டில் கவின் ஆர்மியையும், மீரா மிதுனையும் தெறிக்கவிட்ட சேரன்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு கோலாகலமாக முடிவடைந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சேரன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக மீரா மிதுன் கூறி வருகிறார். மேலும், கவின் ஆதரவாளர்கள் சேரனை சமூக வலைதளங்களில் விமரிசித்து வருகின்றனர்.

கவினுக்கு என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது என்று சேரன் பேட்டி அளித்தார். இதை பார்த்துவிட்டு தான் கவின் ஆர்மி அவரை வசை பாடி வருகின்றனர். கவின் உங்களைப் பற்றி எதுவும் தவறாக பேசவில்லை, அப்படி இருக்கும்போது போலியாக நடந்து கொண்ட நீங்கள் எப்படி கவினை பற்றி அப்படி பேசலாம் என்று கவண் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சேரன் போட்டுள்ள ஒரு ட்வீட் கவின் ஆர்மி மற்றும் மீரா மிதுனுக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது. இவரது ட்வீட்டர் பதிவில், முற்றுப்புள்ளி... சில நேரங்களில் அவசியமாகிறது முற்றுப்பெறாத முக்கிய புள்ளிகள் என நாம் நினைத்தவர்களிடமும். கேள்விக்குறி.. தானாய் உருவாகிறது காரணமே இல்லாமல் நம்மை வெறுப்பவர்களை பார்த்து. ஆச்சர்யக்குறி.. பிரமிக்கவைக்கிறது அளவுகடந்த அன்பு எந்த எதிர்பார்ப்புமின்றி கிடைக்கும்போது என்று பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cheran tweet about meera mitun


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->