நடிகர் சங்க தேர்தல் : வாக்கு எண்ணிக்கை துவக்கம்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ல் நடைபெற்ற தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், நாசர் தாய்மையில் விஷால் கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளித்தது நாசர் விஷால் கார்த்தி ஆகியோர் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எனவும் உத்தரவு பிறப்பித்தது.

அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Casting Association Election Voting counting


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->