பிக்பாஸ் டாப்-5 ஃபைனலில் இருந்து முதலில் வெளியேறிய போட்டியாளர்.! வைரலாகும் ப்ரோமோ.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என 20 பேர் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் தற்போது, ராஜு, பாவனி, நிரூப், ப்ரியங்கா, அமீர் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ராஜுவும், ப்ரியங்கா இரண்டாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்ற நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் நிரூப் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாளை வெளியாகவுள்ள இறுதி எபிசோடின் படப்பிடிப்பு இன்று காலை 9 மணி தொடங்கி இருப்பதாகவும், தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் டாப் 5 போட்டியாளர்களில் நிரூப்பை நடனக்குழு சென்று வெளியே அழைத்து வருவதாகவும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 5 finalist nirup Evicted


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->