தயாரிப்பாளர் செலவில், நட்சத்திர ஓட்டலில் நடிகை ஜாலி..! சொல்லிக்கொள்ளாமல் பண்ணினார் காலி.!
actress cheating hotel management
நடிகை மெஹ்ரீன் தமிழ் சினிமாவில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் சமீபத்தில் தெலுங்கு படமான நோட்டாவிலும் நடித்து இருந்தார். மெஹ்ரீன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார்.
இவர் தெலுங்கு மட்டும்மல்லாமல் ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இருக்கின்றார். இவர் சமீபத்தில் அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு திரைபடத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா தான் ஹீரோ.
இந்தப் படத்தின் புரொமோஷன்க்காக, மெஹ்ரின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், ஓட்டலின் வாடகை கட்டுவது தொடர்பாக தயாரிப்பாளருக்கும், நடிகைக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் வாடகை கட்டவில்லை எனவே அடுத்த நாள் யாரிடமும் சொல்லி கொள்ளாமல் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகி ஊருக்குச் சென்று இருக்கின்றார். ஓட்டல் நிர்வாகம், தயாரிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளது, இருப்பினும் அவர் வாடகை கொடுக்க மறுத்துவிட பின்னர் தயாரிப்பாளர் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு வாடகையை கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
English Summary
actress cheating hotel management