ஜெய்பீம் விவகாரம்.. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.. நடிகர் சூர்யா ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகிய ஜெய்பீம் திரைப்படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பழங்குடியின மக்கள் பொய் வழக்குகளினால் அனுபவிக்கும் இன்னல்களை எடுத்துரைக்கும் படமாக இந்த படம் இருக்கிறது. 

இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பார். இதில், கதாநாயகியாக ரஜிஸா விஜயன் நடித்திருப்பார். இந்த படம் குறித்து சமீபத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தன. 

இதனிடையே, இப்படத்தில் வன்னியர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்கவேண்டும், 5 கோடி இழப்பீடு தர வேண்டும் என கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன்பு இப்படி ஒரு அன்பை பார்த்ததில்லை. நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும்  உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor suriya tweet for jaibhim


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->