பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை! ஆவேசமாக உண்மையை போட்டு உடைத்த சரவணன்!!
actor saravanan says bigg boss 3 final
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று 50 லட்சம் பரிசு தொகையையும் கைப்பற்றினர். இரண்டாம் இடத்தை சாண்டி பிடித்தார். மூன்று இடத்தை லாஷ்லியா கைப்பற்றினர்.
பிக்பாஸ் சீசன் 3 இறுதி நாள் நிகழ்ச்சியில், சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய 2 பேரும் கலந்துகொள்ள வில்லை. பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் சரவணன். அதுபோல, பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் நடைபெற்ற வாக்குவாதம் ஒன்றில் தன் கையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் மதுமிதா.
இந்நிலையில், இறுதி போட்டியில் கலந்து கொள்ளாதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரவணன் பிக்பாஸ் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாதது எனக்கு பெரிய விஷயமே இல்லை. பிக்பாஸ் தாண்டி எனது வாழ்க்கையில் நிறைய உள்ளது. பிக்பாஸ் குறித்து எங்கும் எதுவும் பேசக்கூடாது என உறுதியாக உள்ளேன் என கூறியுள்ளார்.
English Summary
actor saravanan says bigg boss 3 final