சினிமாவை விட்டு ஒதுங்கியது ஏன்? நடிகர் அப்பாஸ் கொடுத்த ஷாக்!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்த நடிகர் அப்பாஸ். முன்னணி கதாநாயகிகளுக்கு பலர் காத்திருக்க இவரோ, ஐஸ்வர்யா ராய், தபூ 
 என ஆரம்பமே அமர்க்களப்படுத்தினார். ஆனால் ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் பெரிய வெற்றியை பெறவில்லை. 

பின்னர் சுசிகணேசனின் திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார். 

இந்த நிலையில் தான், ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னை வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை என கூறி ஷாக் கொடுத்துள்ளார். மேலும் கதை சரியாக அமையாமல் நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதாக கூறியுள்ளார். 

அதன்காரணமாகவே சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்வாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor abbas give explain about quit cinema


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->