இன்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயருமா.? பெட்ரோல் பங்கில் அலைமோதிய வாகன ஓட்டிகள்.!!
today may be petrol price rise
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, சிறிதளவில் இறக்கம், ஏற்றம் கண்டு வந்தது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் விலையால் பிற பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 120 நாட்களுக்கும் மேலாக மாற்றமில்லை. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலால் தான் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. ஆகையில், பெட்ரோல் டீசல் விலை இன்று உயரமோ.? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் நேற்றிரவு பெட்ரோல் போட கூட்டம் கூட்டமாக சென்று அலைமோதியது.
English Summary
today may be petrol price rise