12 வயதில் பங்கு வாங்கிய பசங்க… இன்று உலகின் ஐந்தாவது பணக்காரர்! – வாரன் பஃபெட்டின் அதிரடி பயணம்
Pasanga who bought shares at the age of 12 is now the fifth richest man in the world Warren Buffett action packed journey
அமெரிக்காவின் புகழ்பெற்ற முதலீட்டு வல்லுநரான வாரன் பஃபெட் இன்று உலகின் ஐந்தாவது செல்வந்தராகக் கருதப்படுகிறார். ஆனால், இந்த வெற்றியின் பின்னால் பதுங்கியிருக்கும் அவரது ஆரம்பத்திலிருந்து நிகழ்ந்த கதையை தெரிந்துகொள்வது நம்மில் பலருக்கும் ஊக்கமளிக்கும்.
வாரன் பஃபெட், வெறும் ஆறு வயதில் இருந்தே கோடீஸ்வரர் ஆவதற்கான கனவை பேணி வந்தவர். 1942ஆம் ஆண்டு, அவர் வெறும் 12 வயதாக இருக்கும்போது, சிட்டிஸ் சர்வீஸ் (Cities Service) என்ற பெட்ரோலிய நிறுவனத்தின் மூன்று பங்குகளை வாங்கினார். நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்த பங்குகளை விற்று 5 டாலர்கள் லாபம் ஈட்டினார். இதுதான் அவரின் முதலாவது பங்குச் சந்தை அனுபவம்.
சிறு வயதிலிருந்தே பங்குச் சந்தையில் ஆர்வம் கொண்டிருந்த பஃபெட், தொடர்ந்து அந்த துறையைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டார். அவரின் தந்தையும் ஒரு பங்குத் தரகர் என்பதால் அந்த சூழ்நிலையும் அவருக்கு இத்துறையில் பயிற்சி அளித்தது. 14வது வயதில் அவர் $225 லாபம் ஈட்டினார்.
1956-ம் ஆண்டு, "பஃபெட் பார்ட்னர்ஷிப் லிமிடெட்" என்ற முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். 1965-ல், அவரது நெருங்கிய நண்பரான சார்லி மங்கருடன் இணைந்து பெர்க்ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway) என்ற ஜவுளி நிறுவனத்தைப் பெற்றார். இந்நிறுவனம் நாளடைவில் உலகளாவிய முதலீட்டு நிறுவனமாக மாறியது.
1986-ஆம் ஆண்டில், பஃபெட் தனது 56வது வயதில் பில்லியனர் பட்டத்தை அடைந்தார். இன்று அவர் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
பெர்க்ஷயர் ஹாத்வே பங்கு தற்போது உலகிலேயே விலை உயர்ந்த பங்குகளில் ஒன்றாகும். ஒரு பங்கின் விலை மட்டும் $4,59,800 (இந்திய மதிப்பில் சுமார் ₹3.95 கோடி). கடந்த ஆண்டு இந்த பங்கு $6,47,039 (₹5.56 கோடி) வரை சென்றது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2025 இற்கான நிகழ்நேர பில்லியனர் பட்டியலில், வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு $164.7 பில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pasanga who bought shares at the age of 12 is now the fifth richest man in the world Warren Buffett action packed journey