வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த ஜியோ நிறுவனம்.!!
jio recharge price increase
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு கடந்த 26ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வோடபோன்-ஐடியா நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியது.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் 20 சதவீதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகின்ற ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூ. 75-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 91-ஆக அதிகரித்துள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ் கால் + 100 எஸ் எம் எஸ் ஆகிய திட்டங்களுக்கான தொகை, ரூ.149-க்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 179 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.199 பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ் கால் + 100 எஸ் எம் எஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 239 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.249 பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ் கால் + 100 எஸ் எம் எஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 399 பிளானில் 56 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ் கால் + 100 எஸ் எம் எஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 479 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 555 பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ் கால் + 100 எஸ் எம் எஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 666 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.599 பிளானில் 24 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 2 ஜிபி டேட்டா + அன்லிமிடெட் வாய்ஸ் கால் + 100 எஸ் எம் எஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 719 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
English Summary
jio recharge price increase