ஜியோ IPO வருகை – முதலீட்டாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு!
Jio IPO coming exciting announcement for investors
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் (ஆகஸ்ட் 29, 2025) முதலீட்டாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியது.
முகேஷ் அம்பானி அறிவிப்பில், ஜியோ தனது IPO (Initial Public Offering) க்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். 2026 முதல் பாதியில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜியோ IPO-வின் முக்கிய அம்சங்கள்
முன்னணி முதலீட்டாளர்கள்: மெட்டா, கூகுள் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஏற்கனவே $20 பில்லியன்-க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.
வாடிக்கையாளர் அடிப்படை: 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களுடன் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம்.
இணைப்பு முயற்சிகள்: SpaceX (Starlink) உடன் இணைந்து செயற்கைக்கோள் இணைய சேவை இந்தியாவில் விரைவில்.
ஜியோவின் எதிர்காலக் கனவுகள்
ஒவ்வொரு இந்திய வீட்டுக்கும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு சேர்த்தல்.
மொபைல், பிராட்பேண்ட் இணைப்புகளை அனைவருக்கும் விரிவுபடுத்தல்.
AI for everyone, Everywhere முயற்சியை முன்னெடுத்து உலகளாவிய விரிவாக்கம்.
வணிக துறையை முழுமையாக டிஜிட்டல் தளத்திற்கு மாற்றும் நோக்கம்.
சமீபத்திய நிதி நிலை (Q1 FY 2025-26)
நிகர லாபம்: ₹7,110 கோடி
வருவாய்: ₹41,054 கோடி (19% உயர்வு)
சராசரி பயனர் வருமானம் (ARPU): ₹208.8
5G பயனர்கள்: 200 மில்லியன்+
வீட்டு பிராட்பேண்ட்: 20 மில்லியன்+ இணைப்புகள்
IPO-வின் மூலம் ஜியோ, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்க இருக்கிறது
English Summary
Jio IPO coming exciting announcement for investors