பிசிசிஐ வருவாய் ரூ.14,627 கோடியாக அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


உலகின் செல்வந்தமான விளையாட்டு அமைப்பாக திகழ்வது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ). கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நிதியாண்டு வரை பி.சி.சி.ஐ-க்கு ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டிலேயே ரூ.4,193 கோடி சேர்த்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிலுவைத் தொகைகள் வழங்கிய பின்னரும் இந்த உயர்வு பதிவாகியுள்ளது. வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் இவை வெளிப்படுத்தப்பட்டன.

2019-ல் பி.சி.சி.ஐ-யின் வருவாய் ரூ.3,906 கோடியாக இருந்தது. 2024-ஆம் ஆண்டுக்குள் அது இரட்டிப்பாகி ரூ.7,988 கோடியாக உயர்ந்தது. அதாவது, ரூ.4,082 கோடி கூடுதலாக வந்துள்ளது.

மேலும், பி.சி.சி.ஐ-யின் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு 2019-இல் ரூ.6,059 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.20,686 கோடியாக உயர்ந்துள்ளது. மாநில சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தொகைகளை கழித்த பிறகும் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என்று செயலாளர் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வழங்கும் வருவாய் பகிர்வு, மற்றும் விளம்பர வருவாய்கள் ஆகியவை பி.சி.சி.ஐ-யின் நிதி வளத்தை பெரிதும் உயர்த்தியுள்ளன.

இதோடு, வருமானவரி மற்றும் நீதிமன்ற செலவுகளுக்காக 2023-24 நிதியாண்டில் ரூ.3,150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian Cricket Board BCCI Revenue


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->