அடித்து ஆடும் பிஎஸ்என்எல்! 18 வருடங்களுக்குப் பிறகு கோடிகணக்கில் லாபம்!
BSNL again profit
மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், கடந்த 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை நிறுவனம் இன்று வெளியிட்டது.
அதில், கடந்த 2023-24 நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.849 கோடி இழப்பை சந்தித்த நிலையில், தற்போதைய காலாண்டில் லாபத்தில் மாறியது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபத்தைப் பெற்றிருந்தது.
இதன் மூலம், நிறுவனத்தின் 18 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக இரு தொடர்ச்சியான காலாண்டுகளில் லாபம் பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.