ரூ.38 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,722 ஆகவும், சவரன், ரூ.37,776-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கம் கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,750-க்கும், சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் அதிகரித்து, ரூ.59-ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.59,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

06.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->