முதல்வர் பலவீனம் அடைந்துவிட்டார் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!
tamilnadu bjp leader annamalai press meet in trichy airport
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "திமுக 2ஜி ஃபைல்ஸ் போய்க்கொண்டுள்ளது. தற்போது இரண்டு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வெளியிட்ட பின்னர் திமுக ஃபைல்ஸ் குறித்து பேசுவேன்.
பிஞ்சு போன உதிரிகள் எல்லாம் சேர்ந்து இந்தியா கூட்டணியாக வந்தார்கள். அவர்கள் மட்டும் நாட்டில் முடிவு எடுக்க முடியாது. அது ஆபத்து என்பதால் அதனைத் தடுக்க தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க தொடங்கி உள்ளார்கள். பிரதமர் மோடி திருச்சி மீது உள்ள பாசத்தால் தான் இங்கு இரண்டு முறை வந்துள்ளார்.
முதலில் குமாரமங்கலம் திருச்சியில் இருந்த போது நம்பிக்கையாக இருந்த திருச்சியை மீண்டும் தமிழகத்தின் முக்கிய நகராக மாற்ற வேண்டும். ஸ்ரீரங்கத்தில் நடந்த கம்பராமாயண நிகழ்வு என்பது உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆகவே திருச்சி பிரதமர் இதயத்தில் உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மோசமாக திமுக சரித்திரத்தில் தோற்றுள்ளார். 2014இல் எம்பி எலெக்ஷனில் பூஜ்ஜியம் பெற்றுள்ளனர். முதல்வர் தற்போது பலவீனம் அடைந்து விட்டார், மனதளவில் பாஜக ஜெயிக்க ஆரம்பித்து விட்டது என்று எண்ண தொடங்கிவிட்டார். நான் தாடி வளர்ப்பதற்கு சாமிக்கு ஒரு நேர்த்திக்கடன் உள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu bjp leader annamalai press meet in trichy airport