கிருஷ்ணகிரி ||  சிறுவனின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சிவா-விஜயபிரியா தம்பதியினர். இவர்களுடைய மகன் வினித். இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். 

இதைப்பார்த்த அவரது உறவினர்கள் உடனே சிறுவனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

நாணயம் தொண்டை பகுதியில் சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முடிவெடுத்து, குறித்த நேரத்தில் சிறுவன் விழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு, சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் நன்றிகளையும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy swallowed 5 rupees coin in krishnagiri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->