மேயரின் காருக்கு வழிவிடாத பேருந்து ஓட்டுநர் கைது.!
govt bus driver arrested in kerala
நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அதன் படி இந்த பேருந்து திருவனந்தபுரம் பட்டம் அருகே சென்ற போது மேயர் ஆர்யா ராஜேந்திரனின் கார், பேருந்துக்கு பின்னால் வந்தது.
ஆனால், பேருந்து ஓட்டுநர் மேயர் காருக்கு வழிவிடாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அங்குமிங்கும் வளைந்து சென்றுள்ளார். உடனே வேகமாக முன்னேறி சென்ற மேயரின் கார் அந்த பேருந்தை பாளையம் அருகே முந்தி சென்று வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய மேயர் ஆர்யாவும், அவரது சகோதரனும் ஓட்டுநர் தீபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அங்கு வந்த போலீசார் மேயர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டுநர் தீபுவை கைது செய்தனர். பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் அரசு பேருந்தை ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பக்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
govt bus driver arrested in kerala