ரஷ்யாவின் போர் நிறுத்தம் உக்ரைன் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அதிபர் புதின் அறிவித்தார்.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் வசிப்பவர்கள் உட்பட பலர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதால் வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரம் தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாக புதின் தெரிவித்தார்.

ஆனால் ரஷ்யாவின் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் நிராகரித்தது. மேலும் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க ரஷ்யாவின் தந்திரம் என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி, உக்ரைனின் அமைதி திட்டத்தை பலமுறை புறக்கணித்துள்ளது என்றும், கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த ரஷ்யா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் இந்தப் போர் நிறுத்தம் ரஷ்யாவின் தந்திரம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Zelensky Alleges Russia ceasefire is a ploy to block Ukraine progress


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->