உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த யார் இவர்.? இன்று இவரின் நினைவு தினம்..! - Seithipunal
Seithipunal


 உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். மேலும், பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தனது 'தி லாஸ்ட் சப்பர்" ஓவியத்தை 1490ஆம் ஆண்டு வரையத் தொடங்கி, 1498ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1503ஆம் ஆண்டு புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார். 

இவர் மேலும் நீர்க் கடிகாரம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது.

உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும், பன்முகத்திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World famous artist Leonardo da Vinci memorial day


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->