டெல்டா வைரசை விட ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாட்டை மனிதகுலம் சந்திக்கும்.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!!
WHO warning for corona next level
சீனாவின் உகானில் மாகாணத்தில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் உருமாறிய டெல்டா வைரஸாக பரவி உள்ளது.
டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் பணியில் உலக நாடுகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வரும் நிலையில், டெல்டா வைரசை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138 வது அமர்வில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வைரஸை விட அதிகம் பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் சந்திக்க நேரிடும்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
WHO warning for corona next level