அதிகரிக்கும் போர் பதற்றம்: தைவானை நோக்கி போர் விமானங்களை அனுப்பிய சீனா.!
War tension increases as China sends warplanes to taiwan
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.
மேலும் தைவான் எல்லையில் சீனா போர் பயிற்சி மேற்கொண்ட நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் சீனா, தைவானை நோக்கி 39 போர் விமானங்களையும், 3 அதிநவீன போர்க்கப்பல்களையும் அனுப்பி வைத்திருப்பதாக தைவான் ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனா, தைவானிடையே அங்கீகரிக்கப்பட்ட எல்லைப் பகுதியில் 30 சீன போர் விமானங்கள் நேற்று முன்தினம் கடந்த சென்றதாக தைவான் தெரிவித்துள்ளது. இதில் குண்டு வீசும் எச்-6, ஜே-16 விமானங்கள் மற்றும் 2 முன்னெச்சரிக்கை விமானங்களும் அடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நிலம் சார்ந்த ஏவுகணை அமைப்புகளின் மூலமும், கடற்படை கப்பல்களின் மூலமும் எல்லைப் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக தைவான் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையால் தைவான் எல்லையில் மீண்டும் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
English Summary
War tension increases as China sends warplanes to taiwan